search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழிசை சவுந்தரராஜன்"

    • பால் கொடுத்து வளர்க்கும் பெண் குழந்தைகள் பாலின தொந்தரவிற்கு ஆளாகாமல் பாதுகாப்பை இந்த சமூகம் வழங்க வேண்டுமென உறுதியேற்போம்.
    • புதிய இந்தியாவை படைப்பதில் பெண்களின் பங்கு இருப்பதை உறுதியேற்போம்.

    புதுச்சேரி:

    பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை 2008-ம் ஆண்டு எடுத்த முயற்சியால், ஆண்டுதோறும் ஜனவரி 24 அன்று, "தேசிய பெண் குழந்தைகள் தினம்" கொண்டாடப்படுகிறது.

    இந்நிலையில் தேசிய பெண் குழந்தைகள் தினமான இன்று தெலுங்கானா மாநில கவர்னரும் புதுச்சேரி துணைநிலை கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில்,

    பெண்ணினம் என்பது மெல்லினம் அல்ல வல்லினம் என்பதை இந்த சமூகம் நிரூபிப்பதற்கு அடித்தளமாக இந்த தேசிய பெண் குழந்தைகள் தினத்தில் உறுதியேற்போம்.

    பால் கொடுத்து வளர்க்கும் பெண் குழந்தைகள் பாலின தொந்தரவிற்கு ஆளாகாமல் பாதுகாப்பை இந்த சமூகம் வழங்க வேண்டுமென உறுதியேற்போம்.

    புதிய இந்தியாவை படைப்பதில் பெண்களின் பங்கு இருப்பதை உறுதியேற்போம் என்று தெரிவித்துள்ளார்.

    • ஜிப்மரில் உள்ளிருப்பு டாக்டராக பயிற்சி பெற்று வரும் பெண் டாக்டர் ஒருவரின் செல்போனில் கடந்த செப்டம்பர் 29-ந்தேதி ஒரு மெசேஜ் வந்தது.
    • கவர்னர் உத்தரவின்பேரில் ஜிப்மர் நிர்வாகம் தற்போது மெயில் குறித்து விசாரணை நடத்தி வருகிறது.

    புதுச்சேரி:

    புதுவை கோரிமேட்டில் மத்திய அரசு நிறுவனமான ஜிப்மர் மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இயங்கி வருகிறது.

    இங்கு நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் எம்.பி.பி.எஸ். எம்.டி. உள்ளிட்ட படிப்புகளை படித்து வருகின்றனர்.

    ஜிப்மரில் உள்ளிருப்பு டாக்டராக பயிற்சி பெற்று வரும் பெண் டாக்டர் ஒருவரின் செல்போனில் கடந்த செப்டம்பர் 29-ந்தேதி ஒரு மெசேஜ் வந்தது.

    போலியான ஐ.டி. மூலம் வந்த அந்த மெயிலில், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பயிற்சி வகுப்பு முடிந்தவுடன் தனது அறையில் தனிமையாக சந்திக்க வேண்டும். இல்லாவிட்டால் பயிற்சி மருத்துவர் படிப்பை முடிக்க முடியாது. தேர்ச்சி பெற்றுள்ள எம்.டி. முதலாம் ஆண்டு படிப்பில் தொடர முடியாது என கூறப்பட்டிருந்தது.

    இதேபோல மேலும் சில மருத்துவ மாணவிகளுக்கும் மெயில் வந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெண் டாக்டர் இதுகுறித்து ஜிப்மர் நிர்வாகம், ஜிப்மரில் உள்ள பெண்கள் வன்கொடுமை பிரிவு, சைபர் கிரைம் ஆகியோருக்கு மெயில் மூலம் புகார் அளித்தார். 3 மாதமாகியும் இந்த புகாரின்மீது நடவடிக்கை இல்லை.

    இதுகுறித்து கவர்னர் தமிழிசைக்கும் அந்த பெண் டாக்டர் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என கவர்னர் தமிழிசை பெண் டாக்டரின் இணையதள பக்கத்தில் உறுதியளித்தார். கவர்னர் உத்தரவின்பேரில் ஜிப்மர் நிர்வாகம் தற்போது அந்த மெயில் குறித்து விசாரணை நடத்தி வருகிறது.

    • ஒரு அரசாங்கம், மற்றொரு அரசாங்கத்துக்கு கொடுக்கின்ற பணத்தை தடுப்பதற்கு எந்தவித வாய்ப்பும் இல்லை.
    • திருச்சியில் பிரதமர் பேசும் போது, முதல் வார்த்தையே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களோடு இருக்கிறேன் என்றார்.

    புதுச்சேரி:

    மத்திய அரசு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி முதலியார்பேட்டை போலீஸ் நிலையம் அருகே நேற்று நடந்தது.

    நிகழ்ச்சியில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு மத்திய அரசு திட்ட பயனாளர்களுடன் கலந்துரையாடி நலத்திட்டங்களை வழங்கினார்.

    அதைத் தொடர்ந்து தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கக்கூடாது.

    ஏனென்றால் இது மக்களுக்காக மத்திய அரசு கொண்டு வந்த திட்டமாகும். ரூ.1000 கூட செலவு செய்ய முடியாத ஒரு குடும்ப தலைவர் விபத்தில் சிக்கிய போது ஆயூஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் ரூ.5 லட்சம் தொகையினால் காப்பற்றப்பட்டுள்ளார். இதனை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு பெண் கூறினார். இது பல லட்சம் மக்களுடைய உணர்வாகும். எனவே நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் எம்.எல்.ஏ.க்களுக்கு பாராட்டுக்கள்.

    மத்திய அரசுக்கு எதிரான கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களாக இருந்தாலும் அவர்கள் இந்த நிகழ்ச்சியில் வந்து கலந்து கொள்ள வேண்டும்.

    இதை அரசியலாக பார்க்காமல் அவசியமாக பார்க்க வேண்டும். ஒரு அரசாங்கம், மற்றொரு அரசாங்கத்துக்கு கொடுக்கின்ற பணத்தை தடுப்பதற்கு எந்தவித வாய்ப்பும் இல்லை. அவர்கள் நேரடியாக கணக்கு வைத்துள்ளனர்.

    ஆகவே தமிழக நிதி தொடர்பாக மத்திய நிதி மந்திரி வெளிப்படையாக சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தமிழக அமைச்சர் உதயநிதி, பிரதமரை பார்க்கிறார். மறுநாள் காலையில் ஒரு நாளிதழில் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து கட்டுரை எழுதுகின்றனர்.

    குஜராத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது பிரதமர் உடனே சென்றார் என்கிறார்.

    அப்போது குஜராத் முதல்-மந்திரி வெள்ளம் பாதித்த பகுதியில் மக்களோடு இருந்தார். ஆனால் தமிழகத்தில் வெள்ளம் பாதித்த போது முதலமைச்சர் எங்கே இருந்தார் என்று எல்லோருக்கும் தெரியும். முதலமைச்சரே அங்கு செல்லவில்லை. ஆனால் பிரதமர் மட்டும் வரவில்லை என்று குறை கூறுகின்றனர்.

    திருச்சியில் பிரதமர் பேசும் போது, முதல் வார்த்தையே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களோடு இருக்கிறேன் என்றார்.

    புதுச்சேரியில் நல்ல கலாசாரம் தான் இருக்க வேண்டும். வெடிகுண்டு கலாசாரம் இருக்கக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உடல்நலமும், மனநலமும் நன்றாக இருந்தால் வாழ்வில் வெற்றி பெற முடியும்.
    • சுற்றுலாத் துறை சார்பில் 29-வது அகில உலக யோகா திருவிழா கடற்கரை சாலையில் நடை பெற்று வருகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அரசு சுற்றுலாத் துறை சார்பில் 29-வது அகில உலக யோகா திருவிழா கடற்கரை சாலையில் நடை பெற்று வருகிறது.

    இதன் தொடக்க விழாவிற்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கினார். கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    யோகா என்பது மனதும், உடலும் ஒருமைப்பட்டு செயலாற்றுவது ஆகும். உடல்நலமும், மனநலமும் நன்றாக இருந்தால் வாழ்வில் வெற்றி பெற முடியும். யோகாசனம் செய்யும் போது மூளைக்கான ரத்த ஓட்டம் அதிகமாக இருக் கும்.

    மூளையில் உள்ள செல்கள் உற்சாகமாக இருக்கும். அதனால் குழந்தைகள் யோகா செய்வது மிகமிக முக்கியம். தினமும் யோகா செய்தால் மனிதனுக்கு மாரடைப்பு வருவதற்கு வாய்ப்பே இல்லை. அந்தளவுக்கு யோகா நமது உடலையும், மனதையும் மிகத் தெளிவாக எடுத்துச்செல்கிறது.

    நம்மை அமைதியாக வைக்கிறது. நம் நாட்டில் செய்த யோகா கலையை இன்று உலகம் முழுவதும் செய்கிறார்கள் என்றால் அதற்கு இந்தியா பெருமைப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    யோகா விழாவில் நாடு முழுவதிலும் இருந்து 600 யோகா கலைஞர்கள் பங்கேற்று செயல்விளக்கம் அளித்தனர்.

    • மழை, வெள்ள பாதிப்புகளை பார்க்க தமிழகம் முழுவதும் செல்லவில்லை.
    • எனக்கு ஆதரவு தெரிவித்த மக்கள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளனர். மனிதாபிமான அடிப்படையில் அங்கு சென்றேன்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மழை, வெள்ள பாதிப்புகளை பார்க்க தமிழகம் முழுவதும் செல்லவில்லை. தூத்துக்குடிக்கு மட்டுமே சென்றேன். அங்கு மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

    மக்கள் கூறிய கருத்தை நான் வெளிப்படுத்தினேன். அது என்னுடைய கருத்து கிடையாது. மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

    என் சொந்த ஊர். நான் போட்டியிட்ட இடத்தில் எனக்கு ஆதரவு தெரிவித்த மக்கள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளனர். மனிதாபிமான அடிப்படையில் அங்கு சென்றேன்.

    அமைச்சர் சேகர்பாபு கூறியது போல போட்டியிட செல்லவில்லை. தமிழக அரசில் தலையிட செல்லவில்லை.

    சபாநாயகர் அப்பாவு, இவர் யார் அங்கு ஆய்வு செய்வதற்கு? என கேள்வி எழுப்புகிறார். தி.மு.க.வை குற்றம்சொல்ல வேண்டும் என்ற நோக்கம் இல்லை. ஆனால் தவறு இழைக்கப்பட்டுள்ளது என்பதை கூறினேன்.

    என் சகோதர, சகோதரிகள் துன்பத்தில் பங்கேற்க ஆறுதலுக்காக சென்றேனே தவிர, ஆய்வுக்காக செல்லவில்லை. இதை தி.மு.க.வினர் கொச்சைப்படுத்த வேண்டாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    முன்னதாக, தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, அரசியல் கட்சியை விமர்சிக்கும் அதிகாரம் கவர்னருக்கு இல்லை. தி.மு.க.வின் திராவிட மாடல் குறித்து தமிழிசை விமர்சித்து பேசியுள்ளார். இதனால் மத்திய அரசு அவரை கவர்னர் பதவியில் இருந்து திரும்ப பெற வேண்டும் என கூறிப்பிட்டு இருந்தார். மேலும் ஒரு கவர்னர் அரசியல் செயல் குறித்து விமர்சித்துள்ளதற்கு பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

    • வெள்ள பாதிப்புகளை பார்வையிட புதுச்சேரி துணைநிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தூத்துக்குடிக்கு வந்தார்.
    • தென் மாவட்டங்களில் மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை முறையாக எடுத்திருக்க வேண்டும்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய்த அதீத கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், வெள்ள பாதிப்புகளை பார்வையிட புதுச்சேரி துணைநிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தூத்துக்குடிக்கு வந்தார்.

    அப்போது விமான நிலையத்தில் அவர் கூறியதாவது:-

    * தென் மாவட்டங்களில் மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை முறையாக எடுத்திருக்க வேண்டும்.

    * தென் மாவட்டங்களில் ஆறு, குளங்கள் எதுவும் தூர்வாரப்படவில்லை.

    * இந்த சூழ்நிலையை மாநில அரசு மிக மோசமாக கையாண்டுள்ளது.

    * மழை வெள்ளத்தை கையாள்வதில் மாநில அரசு தோல்வி அடைந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பெரியாரின் கருத்துகள் மதிக்கக்கூடியவை.
    • கவர்னர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

    கோவை:

    தெலுங்கானா, புதுச்சேரி மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று கோவை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஸ்ரீரங்கம் கோவிலில் நடந்த சம்பவம் மன வருத்தம் அளிக்கிறது. அங்கு ரத்தம் சிந்தி இருக்கிறது. வைகுண்ட ஏகாதசி நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது இந்து மதத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும்.

    ரத்தம் சிந்தும் அளவிற்கு பாதுகாப்பு இல்லாத நிலை இருந்து இருப்பது, பாதுகாப்பு சீர்கேடுகளை காட்டுகிறது. இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. உண்டியலை எடுக்க குறியாக இருப்பதில் காட்டும் அக்கறை பாதுகாப்பிலும் இருக்க வேண்டும். வேறு மாநிலத்தவர்கள் நம் கோவிலுக்கு வரும்போது கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டியது நம் கடமை.

    பெரியாரை, தேசிய விரோத கருத்துகளை பகிர்வதற்கு கேடயமாக தி.மு.க.வினர் பயன்படுத்துகின்றனர். பெரியாரின் கருத்துகள் மதிக்கக்கூடியவை. பெரியாரின் கருத்துகளை அழுத்தமாக பதிவு செய்வோம் என முதலமைச்சர் தெரிவிக்கின்றார். பெண்களுக்கு உரிமை கொடுக்கும் ஆட்சிதான் மத்தியில் இப்போது நடக்கின்றது. தி.மு.க.வும் கூட்டணி கட்சிகளும் தாரை வார்த்ததை மத்திய அரசு மீட்டு எடுத்து கொண்டு வருகின்றது. காஷ்மீர், கவர்னர், கட்சத்தீவு என மத்தியில் ஆட்சியில் இருந்த பொழுது செய்யாத விஷயங்களை இப்போது தி.மு.க. பேசிக்கொண்டு இருக்கிறது.

    கவர்னர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. கருத்தை கருத்தால் எதிர் கொள்ள வேண்டும். கேரள கவர்னர் மீது தாக்குதல் முயற்சி வன்மையாக கண்டிக்கதக்கது.


    மத்திய அரசிடம் இருந்து நிதி பெறுவது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்து குறித்த கேள்விக்கு உதயநிதி வார்த்தைகளை அடக்கி பேச வேண்டும். அடக்கவில்லை என்றால் அவர் எதிர்மறை தலைவராக இந்தியா கூட்டணியிலும், மற்ற இடங்களிலும் வருவார்.

    கலைஞரின் பேரனா நீங்க? அவர் இப்படியா பேசினார்? திட்டுவதாக இருந்தாலும் அழகு தமிழில் திட்டுவார். தி.மு.க. யாரோட அப்பன் வீட்டு சொத்து. தி.மு.க. தொண்டர்கள் முதலில் இதை உதயநிதியிடம் கேள்வி கேட்க வேண்டும். அதற்கு அவரே வழி செய்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாம்பு ஊர்ந்து வருவதை தடுக்கலையே....
    • இன்று சென்னையை கூவமாக மாற்றி படகு விட்டுக் கொண்டிருக்கிறார்கள்...

    சென்னை:

    சென்னையின் மழை பாதிப்புகள் பற்றி தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் ஒரு கவிதை எழுதி உள்ளார். 2015 வெள்ளத்தின்போது அவர் நிவாரண பணிகளில் ஈடுபட்ட புகைப்படத்தையும் இணைத்து பதிவிட்டுள்ளார். அந்த கவிதை வருமாறு:-

    இது மழையின் தண்ணீர் கவிதையல்ல....

    இது மக்களின் கண்ணீர் கவிதை....

    என்னை....

    உன்னை.... வளர்த்த சென்னை வெள்ளத்தில் தத்தளிக்கிறது

    மழை நின்ற பின்பும் தண்ணீர் வடியவில்லை...

    மக்களின் கண்ணீர் வற்றவில்லை....

    விடியல் இருக்கும் என்றார்கள்...

    தண்ணீர் வடியல் கூட இல்லையே...

    அவகாசம் இல்லை என்று சாவகாசமாய் சொல்கிறார்கள்...

    இன்றா இவர்களிடம் சென்னை இருக்கிறது...

    அன்றே மேயராக சென்னையில் இருந்தவர்கள் தானே?

    சிங்கப்பூராக ஆக்குகிறோம் என்றார்கள்...

    பூராக தண்ணீர் வடியும் ஊராககூட ஆக்கவில்லையே....

    பம்பு வைத்து தண்ணீர் எடுக்கலையே....

    பாம்பு ஊர்ந்து வருவதை தடுக்கலையே....

    கூவத்தில் படகு விடுவோம் என்றார்கள்....

    இன்று சென்னையை கூவமாக மாற்றி படகு விட்டுக் கொண்டிருக்கிறார்கள்...

    குழிக்குள்ளும், புதருக்குள்ளும் மனித உடல்கள்....

    பழிக்குள்ளாக்குகிறார்கள் இன்றைய மழையை....

    பள்ளம் தோண்டி வடிகால் இடுகிறோம் என்றார்கள்....

    ஆனால் விடிவு காலம் இல்லாமல் மக்கள் தவிக்கிறார்கள்....

    தண்ணீர் வடியும் காலம் தெரியாமல் பரிதவிக்கிறார்கள்....

    பாலுக்கு அழும் குழந்தையை பார்த்திருக்கிறோம்....

    இன்று பாலுக்காக குடும்பங்களே அழுவதை பார்த்து பரிதவிக்கிறோம்....

    பொருளை இழந்து வாடும் மக்களுக்கு மீண்டும் பொருள் கிடைக்க அருளைக் கொடு....

    இன்று இந்தக் கொடுமையை தாங்கும் பலத்தை கொடு....

    பின்பு மழையை தாங்கும் கட்டமைப்பை கொடு....

    ஆண்டு கொண்டிருப்பவர் செய்ய தவறியதால்....

    ஆண்டவனே உன்னை வேண்டுகிறேன்....

    கூப்பிடும் தூரத்தில் நான் இருந்திருந்தால்....

    துயர் துடைக்க முடியவில்லை என்றாலும்....

    கண்ணீர் துடைக்கவாவது ஓடோடி வந்திருப்பேன்....

    அன்று வந்தது போல் படகோடவாது வந்திருப்பேன்....

    நம் மாநில மழைக்காட்சி கண்டாலும்....

    பணி மாநில ஆட்சிப்பணி இருப்பதால்....

    தூரத்தில் இருந்தே உங்கள் துயரத்தில் பங்கெடுக்கிறேன்....

    தொலைவில் இருந்தாலும் மழை வடியும் தொலை நோக்கு திட்டத்தை திட்டமிட வேண்டுமென்ற வேண்டுகோளோடு....

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • தவறு நடந்தால் அதை விசாரிக்க வேண்டும்.
    • விசாரணை நடத்த பல வழி முறைகள் உள்ளன.

    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் மாளிகையில் அசாம் மாநில உதய தினம் இன்று காலை கொண்டாப்பட்டது. விழாவில் கவர்னர் தமிழிசை பங்கேற்றார். பின்னர் கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    கவர்னர், அமலாக்கத்துறை, வருமானவரித்துறை என அனைத்தும் பா.ஜ.க.வில் சேர்த்து விடுகின்றனர். வேறு எல்லாவற்றையும் பாஜகவில் சேர்த்து விடுங்கள்.

    தமிழக போலீசை தி.மு.க. போலீஸ் என அழைக்கலாமா? அமலாக்கத்துறையில் ஒரு பிரச்சினை நடந்துள்ளது.

    ஒரு அமைச்சர் வீட்டுக்கு சென்றார்கள். அமைச்சர் வீட்டிலிருந்து கட்டி, கட்டியாக, பெட்டி, பெட்டியாக எடுத்தார்கள். அதேபோல அனைத்து தமிழக அமைச்சர்கள், முதலமைச்சர் வீடுகளுக்கும் சோதனைக்கு செல்வோம் என்று கூறினார்களா? இலாகா இல்லாமல் ஒரு அமைச்சர் உள்ளார். அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.


    அதற்காக அனைத்து அமைச்சர்கள் மீதும் குற்றம் சொல்ல முடியுமா? எல்லா துறையிலும் பிரச்சினை இருக்கலாம், பிரச்சினைக்குரிய அதிகாரிகள் இருக்கலாம். ஒரு நபருக்காக துறையே மோசமானது, எல்லோரும் லஞ்சம் வாங்குவார்கள், அது மத்திய அரசு அமைப்பு, நாங்கள் மாநில அரசு அமைப்பு எனவே, மத்திய அரசு நிறுவனத்தில் புகுந்து சோதனை நடத்துவோம் என கூறலாமா?

    இந்த பிரச்சினையில் தமிழக அரசு தவறான முன்னுதாரணத்தை எடுத்து செல்கிறது. தவறு நடந்தால் அதை விசாரிக்க வேண்டும். விசாரணை நடத்த பல வழி முறைகள் உள்ளன. அதற்கென தனியாக அதிகாரிகள் உள்ளனர்.

    மத்திய, மாநில அரசு நிறுவனங்கள் இணக்கமாக செயல்பட வேண்டும். ஒருவர் தவறு செய்தால் அவர் எந்த துறையாக இருந்தாலும் தவறுதான்.

    கடந்த கால மத்திய காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆட்சியில் அமைச்சர்கள் மீது எவ்வளவோ ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தது. ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசில் ஒரு ஊழல் குற்றச்சாட்டும் ஒருவர் மீதும் கூற முடியாத அளவுக்கு இத்தனை ஆண்டுகளாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.

    அங்கே சில அதிகாரிகள் செய்யும் தவறுக்கு அரசு மீது குறைகூறுவதா? தமிழகத்தில் வேங்கைவயலில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. நாங்குநேரியில் ஒரு பிரச்சினை நடந்தது. இதனால் தமிழகம் முழுவதும் பட்டியலின மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என முத்திரை குத்த முடியாது. சுப்ரீம்கோர்ட்டு கவர்னரும், முதலமைச்சரும் அமர்ந்து பேச வேண்டும் என தெரிவித்துள்ளது.

    புதுவையில் முதலமைச்சருடன் இணைந்து செயல்படுகிறேன். எனக்கு புறக்கணிக்கும் பழக்கம் இல்லை, அரவணைக்கும் பழக்கம்தான் உள்ளது. மருத்துவக்கல்வி விவகாரத்தில் கவர்னர் கட்டப்பஞ்சாயத்து செய்கிறார் என எதிர்கட்சித்தலைவர் சிவா கூறுகிறார்.

    நான் என்ன கட்டப்பஞ்சாயத்து செய்கிறேன்? எந்த விவகாரத்துக்கும் கவர்னர்தான் காரணமா?

    வெறும் வாய்க்கு கவர்னர்தான் அவலா? எதிர்கட்சித்தலைவர் சிவா கவர்னரையே எதற்கெடுத்தாலும் மென்று வருகிறார். அவருக்கு கொஞ்சம் அவல் வாங்கி கொடுங்கள். அதை மெல்லட்டும்.

    இவ்வாறு கவர்னர் தமிழிசை கூறினார்.

    • கவர்னராக பதவியேற்ற நாள் முதல் புதுவையை என் குழந்தையாக பார்த்து பணியாற்றி வருகிறேன்.
    • தேர்தலில் போட்டியிடுவது என்பது தற்போது வரை சஸ்பென்சாகவே இருக்கட்டும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி கவர்னர் மாளிகையில் நாகாலாந்து உதயநாள் விழா நடந்தது.

    கவர்னர் தமிழிசை தலைமையில் நடந்த விழாவில் புதுவை பல்கலைக்கழகம், ஜிப்மரில் படிக்கும் நாகாலாந்து மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களோடு இணைந்து கவர்னர் தமிழிசை நடனமாடினார்.

    பின்னர் கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    கவர்னரும், முதலமைச்சரும் அமர்ந்து பேசினால் பல தீர்வுகள் கிடைக்கும் என நான் தொடர்ந்து கூறி வருகிறேன். இந்த கருத்தை உச்சநீதிமன்றம் தற்போது பதிவு செய்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. எம்.எல்.ஏ.க்கள் அவர்கள் தொகுதியில் நடக்கும் விழாவில் அவர்களை அழைக்க வேண்டும் என கூறுகின்றனர்.


     அவர்கள் தங்கள் தொகுதி பிரச்சினைகளை முதலில் தீர்க்க வேண்டும். அதைவிட்டுவிட்டு நிகழ்ச்சிக்கு ஏன் அழைக்கவில்லை என அரசியல் செய்யக்கூடாது. நிகழ்ச்சிக்கு அழைக்காத கலெக்டரிடம் கேள்வி கேட்க வேண்டும். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற என்னிடம் கேட்டால் நான் என்ன சொல்ல முடியும்?

    கவர்னராக பதவியேற்ற நாள் முதல் புதுவையை என் குழந்தையாக பார்த்து பணியாற்றி வருகிறேன். முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, நான் புதுவையிலேயே உள்ளேன் என கூறுகிறார். அந்தளவுக்கு புதுவையின் மீது கவனம் செலுத்துகிறேன்.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக விரைவில் அறிவிப்பேன். தற்போது கவர்னராக இருப்பதால் அதுகுறித்து பேச முடியாது. தேர்தலில் போட்டியிடுவது என்பது தற்போது வரை சஸ்பென்சாகவே இருக்கட்டும்.

    இவ்வாறு கவர்னர் தமிழிசை தெரிவித்தார்.

    • பிரமரின் வளர்ச்சியடைந்த பாரதம் என்பது நமது லட்சியம்.
    • மழைக்கால நடவடிக்கைகளுக்காக காய்ச்சல் முகாம்கள் தொடங்கப்பட்டிருக்கிறது.

    புதுச்சேரி:

    பிரதமர் மோடி கலந்துரையாடுதல் மற்றும் கானொளி மூலம் உரையாற்றும் நிகழ்ச்சி புதுச்சேரி அருகே சேலியமேடு கிராம பஞ்சாயத்தில் அரங்கனூர் சமூதாய நலக்கூடத்தில் நடைபெற்றது.

    சிறப்பு விருந்தினராக, கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் கலந்துகொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அவர் கூறியதாவது:-

    பிரமரின் வளர்ச்சியடைந்த பாரதம் என்பது நமது லட்சியம். 'மோடி கேரண்டி வேன்' எல்லா கிராமங்களுக்கும் சென்று மத்திய அரசின் திட்டங்களை விளக்கி வருகிறது. பிரதமர் சொன்னது போன்று மூளை முடுக்குகளிலும் கூட மத்திய அரசின் திட்டங்கள் சென்று சேர்ந்திருக்கிறது. இது போன்ற பயனாளர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு வாழ்த்துக்கள் சொல்வதற்கும் இன்னும் பல பயனாளிகளை கண்டறிவதற்கும் இந்த திட்டம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

    பிரதமரின் வீடு கட்டும் திட்டப் பயனாளியின் வீட்டுக்கு சென்றிருந்தேன். அந்த வீட்டின் உரிமையாளர் "அம்மா இதற்கு முன்பு ஓலை வீட்டில் இருந்தேன். இப்போது கான்கிரீட் வீட்டில் வசிக்கிறேன். அதற்கு பிரதமரின் வீடு கட்டும் திட்டம் தான் காரணம்" என்று கூறினார்.

    அதைப்போல இன்னும் தேவைகள் அதிகமாக இருக்கும் பட்சத்தில் அவற்றைக் கண்டறிவதற்கும் இது உதவுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனை தொடர்ந்து புதுச்சேரியில் மழைக்கால காய்ச்சலை தடுக்க அரசு எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவிலலை என்று குற்றச்சாட்டு கூறப்படுவது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து கவர்னர் தமிழிசை கூறியதாவது:-

    மழைக்கால நடவடிக்கைகளுக்காக காய்ச்சல் முகாம்கள் தொடங்கப்பட்டிருக்கிறது. படுக்கை வசதிகள், மருந்து மாத்திரைகள் எல்லாம் முன்னெச்சரிக்கையாக தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது. ஆகவே குறை சொல்ல வேண்டும் என்பதற்காகவே பேச வேண்டாம். மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் நாம் பேச வேண்டும்.

    தொடர்ந்து அவரிடம் நிருபர்கள் இந்த ஆட்சியில் எல்லாத்துறைகளிலும் 30 சதவீதம் கமிஷன் வைக்கப்படுகிறது. ஊழல் மிகுந்த ஆட்சியாக இருக்கிறது. இதில் கவர்னருக்கும் சம்மந்தம் இருக்கிறது என்றும், இது சம்மந்தமாக ஜனாதிபதிக்கும் புகார் தெரிவிக்க உள்ளோம் என்று எதிர்கட்சியினர் குற்றச்சாட்டு வைத்துள்ளனரே என்ற கேள்விக்கு, இது தொடர்பாக அவர்களிடம் தான் கேட்க வேண்டும்.

    இதில் கவர்னருக்கு சம்மந்தம் இருக்கிறது என்று எப்படி சொல்ல முடியும்? சம்பந்தமே இல்லாமல் பேசிவிட்டு சம்பந்தம் இருக்கிறது என்றால் என்ன அர்த்தம்.

    இவ்வாறு கவர்னர் தமிழிசை தெரிவித்தார்.

    • மாணவர்களுக்கு மாலையில் சிறுதானிய சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை அமல்படுத்த அரசு முடிவு செய்தது.
    • பள்ளிக்கல்வித்துறை அனுப்பிய கோப்புக்கு கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் 300 அரசு பள்ளிகள் உள்ளது. இதில் படிக்கும் மாணவர்களுக்கு மதிய உணவை அரசு வழங்கியது.

    இதற்காக 11 இடங்களில் மத்திய சமையல் கூடங்கள் நிறுவப்பட்டது. இந்த நிலையில் 2018 முதல் அட்சய பாத்திரம் என்ற நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்து நவீன சமையல் கூடத்தில் மதிய உணவு தயாரிக்கப்பட்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    இதுதவிர காலையில் பால், வாரம் 3 முட்டை வழங்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து மாணவர்களுக்கு மாலையில் சிறுதானிய சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை அமல்படுத்த அரசு முடிவு செய்தது. பள்ளிக்கல்வித்துறை அனுப்பிய இந்த கோப்புக்கு கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.

    இதுகுறித்து அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது:-

    கவர்னர் ஒப்புதலை தொடர்ந்து டெண்டர் கோரியுள்ளோம். டெண்டர் பணிகள் முடிய 2 மாதங்களாகும். அதன்பிறகு ஜனவரி மாதம் இறுதியில் குடியரசு தினத்தில் சிறுதானிய பிஸ்கட் வழங்கும் திட்டத்தை தொடங்க உள்ளோம். நாளுக்கு ஒரு தானிய பிஸ்கட் வழங்க திட்டமிட்டுள்ளோம். மாலையில் பள்ளி முடிந்து மாணவர்கள் வீட்டுக்கு செல்லும் முன்பு அவர்களுக்கு சிறுதானிய பிஸ்கட் வழங்கப்படும் என்றார்.

    ×